sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

மேல்நிலை குடிநீர் தொட்டியை லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆய்வு

/

மேல்நிலை குடிநீர் தொட்டியை லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆய்வு

மேல்நிலை குடிநீர் தொட்டியை லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆய்வு

மேல்நிலை குடிநீர் தொட்டியை லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆய்வு


ADDED : மே 16, 2025 07:16 AM

Google News

ADDED : மே 16, 2025 07:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாத்துார் : விருதுநகர் மாவட்டம் சாத்துார் மேட்டமலையில் ரூ. 18 லட்சத்தில் கட்டப்பட்ட மேல்நிலை குடிநீர் தொட்டியை லஞ்ச ஒழிப்பு போலீசார் தலைமையில் வருவாய் அதிகாரிகள் தர ஆய்வு செய்தனர்.

மேட்டமலை ஊராட்சியில் செல்லியார அம்மன் கோயில் அருகே புதிதாக மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டது. 15 வது நிதிக்குழு மானிய நிதி ரூ. 18 லட்சத்தில் கட்டப்பட்ட போர்வெல்லுடன் கூடிய மேல்நிலை தொட்டி கட்டி திறக்கப்பட்ட சில மாதங்களிலேயே தொட்டியில் விரிசல் விழுந்து தண்ணீர் கசிய துவங்கியது. அப்பகுதியைச் சேர்ந்த கண்ணன் மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டுமானத்தில் ஊழல் நடந்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு புகார் அளித்தார்.

லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். நேற்று ஆய்வாளர் பூமிநாதன் தலைமையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அரசு கட்டட பொறியாளர், வருவாய்த்துறையினர் தர கட்டுப்பாட்டுக்கான சூப்பர் விசிட் என்ற பெயரில் மேல்நிலை குடிநீர் தொட்டியை ஆய்வு செய்தனர். ஊராட்சி அலுவலகத்திற்கு சென்ற லஞ்ச ஒழிப்பு போலீசார் மேல்நிலை தொட்டி கட்டப்பட்டதற்கான ஆவணங்களை விசாரணைக்காக எடுத்துச் சென்றனர்.






      Dinamalar
      Follow us