
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்; ஈரோட்டில் நடந்த குடியரசு தின தடகள போட்டியில் விருதுநகர் மாவட்டம் சார்பில் மேலக்கோட்டையூர் சின்னையாபுரத்தில் உள்ள தேவசகாயம் அன்னத்தாயம்மாள் மேல்நிலைப்பள்ளியில் இருந்து 11 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
அவர்களில் பிளஸ் 2 படிக்கும் பொன் அஜீத் 19 வயதுக்குட்பட்டோர் மாணவர் பிரிவில் 200 மீட்டர் ஓட்டத்தில் இறுதி போட்டியில் 3ம் இடம் பெற்றார். இவர் 200 மீட்டர் துாரத்தை 23.04 வினாடிகளில் கடந்து மாநில அளவில் மூன்றாமிடம் வெற்றி பெற்றார். இம்மாணவரை பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள் பாராட்டினர்.

