ADDED : மே 20, 2025 12:35 AM
வாலிபருக்கு பிடிவாரண்ட்
விருதுநகர்: சிவகாசி பராசக்தி காலனியைச் சேர்ந்தவர் மூர்த்திராஜ் 32. இவர் மீது விருதுநகர் பஜார் போலீஸ் ஸ்டேஷனில் உள்ள வழக்கு தொடர்பாக விருதுநகர் ஜே.எம்., 1 நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதனால் பிடிவாரண்ட் பிறக்கப்பட்டு தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இவர் குறித்து தகவல் தெரிந்தால் எஸ்.பி., அலுவலகம் 94981 01455 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மது விற்ற 3 பேர் கைது
சாத்துார்: ஏழாயிரம் பண்ணை இ. ெரட்டியபட்டியைச் சேர்ந்தவர் பெருமாள் 40, கல்குவாரி பகுதியிலும் ,வெற்றிலை யூரணி பொன் வளவன் 42, வீட்டில் வைத்தும், மேல கோதை நாச்சியார்புரம் ஆனந்தி 42 ,வீட்டில் வைத்தும் மது பாட்டில் விற்றனர்.போலீசார் 58 மது பாட்டில்களை பறிமுதல் செய்து அவர்களை கைது செய்தனர்.
பட்டாசு பறிமுதல்: ஒருவர் கைது
சாத்துார்: சாத்துார் மேலக் கோதை நாச்சியார்புரத்தை சேர்ந்தவர் தங்கம், 39.அரசு அனுமதி இன்றி வீட்டில் சோல்சா பட்டாசு பதுக்கி வைத்திருந்தார். போலீசார் பட்டாசுகளை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
பெண் மாயம்
சாத்துார்: தாயில்பட்டி கலைஞர் காலனியை சேர்ந்த வர் தேவன், 52. இவரது இளைய மகள் மதுமிதா, 24.நேற்று முன்தினம் காலை 9:00 மணிக்கு சர்ச்சுக்குசென்றவர் மாயமானார்.வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.