sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

அருப்புக்கோட்டை ரோடுகளில் திரியும் மாடுகளால் அவதி

/

அருப்புக்கோட்டை ரோடுகளில் திரியும் மாடுகளால் அவதி

அருப்புக்கோட்டை ரோடுகளில் திரியும் மாடுகளால் அவதி

அருப்புக்கோட்டை ரோடுகளில் திரியும் மாடுகளால் அவதி


ADDED : ஜன 18, 2025 06:56 AM

Google News

ADDED : ஜன 18, 2025 06:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டையில் போக்குவரத்திற்கு இடைஞ்சல் செய்யும் வகையில் சுற்றி திரியும் மாடுகளின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கவுன்சிலர்கள் வலியுறுத்தியும் நகராட்சி அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை.

அருப்புக்கோட்டையில் மதுரை ரோடு, திருச்சுழி ரோடு, அண்ணாதுரை சிலை பகுதி, பழைய பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் மாடுகள் சுற்றித் திரிகின்றன.

பஜார் பகுதிகளில் ரோடு குறுகலாக இருப்பதால் ஏற்கனவே போக்குவரத்திற்கு இடைஞ்சலாக உள்ளது. இதில் சுற்றி திரியும் மாடுகளாலும் இடைஞ்சல் ஏற்படுகிறது. பழைய பஸ் ஸ்டாண்டில் இரவு நேரங்களில் மாடுகள் படுத்து ஓய்வு எடுப்பதால் காலையில் கடைகளை திறக்க முடியாமல் கடைக்காரர்கள் அவதிப்படுகின்றனர்.

தொடர்ந்து மாடுகளால் இடைஞ்சல் ஏற்படுவது குறித்து நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் கட்டுப்படுத்த தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.

ஆனால் சுகாதாரப் பிரிவு அலுவலர்கள் காரணங்களை கூறுகின்றனரே தவிர, நகரில் சுற்றித் திரியும் மாடுகளை பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கும் நடவடிக்கைகளை எடுப்பதில்லை.

மாவட்ட நிர்வாகம் தான் இதுகுறித்து நகராட்சிக்கு அறிவுறுத்த வேண்டும்.






      Dinamalar
      Follow us