/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
டாஸ்மாக் ஊழியர்கள் மீது தாக்குதல்
/
டாஸ்மாக் ஊழியர்கள் மீது தாக்குதல்
ADDED : செப் 24, 2024 04:10 AM
விருதுநகர்: விருதுநகர் அருகே வச்சக்காரப்பட்டி டாஸ்மாக் கடையின் மேற்பார்வையாளர் சிவக்குமார், விற்பனையாளர் செல்வராஜ். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு பணியில் இருக்கும் போது தம்மநாயக்கன்பட்டியைச் சேர்ந்த சுந்தரராஜ் 48, பீர் பாட்டில் வாங்கியுள்ளார்.
பீர் கூலிங்காக இல்லை என தகராறில் ஈடுபட்டுஅங்கிருந்து சென்று விட்டார். அதன் பின் சிறிது நேரம் கழித்து காரில் வந்த சுந்தரராஜ், மதுரை அவனியாபுரத்தை சேர்ந்த சரவண வேல், முத்துகுமார், மதனகோபால், முத்துக்குமார் ஆகியோர்மேற்பார்வையாளர், விற்பனையாளரை கட்டையால்தாக்கினர்.
இதில் காயமடைந்த இருவரும் விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். வச்சக்காரப்பட்டி போலீசார் 5 பேர் மீதும் வழக்கு பதிந்தனர்.

