ADDED : செப் 20, 2025 03:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை நகராட்சி சார்பாக நெசவாளர் காலனியில் பாலித்தீன் ஒழிப்பு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கிராமிய கலை நிகழ்ச்சி நடந்தது.
நகராட்சி தலைவர் சுந்தரலட்சுமி கமிஷனர் ராஜமாணிக்கம் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் டெங்கு ஒழிப்பு, மழைநீர் சேகரிப்பு, குடிநீர் சிக்கனம், மரம் வளர்ப்பு, கால்நடை பாதுகாப்பு, பாலித்தீன் பைகள் ஒழிப்பு உள்ளிட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்தது ஏற்பாடுகளை நகராட்சி சுகாதார அலுவலர் குமார், ஆய்வாளர் சரத்பாபு, கவுன்சிலர் ஜோதிராமலிங்கம் மற்றும் துப்புரவு மேற்பார்வையாளர்கள் தூய்மை பணியாளர்கள் செய்தனர்.