ADDED : செப் 19, 2024 04:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி: சிவகாசி மாநகராட்சியில் துாய்மையே சேவை என்ற தலைப்பில் துாய்மையே எனது பழக்கம் துாய்மையே எனது வழக்கம் என்ற கோட்பாட்டை வலியுறுத்தி கல்லுாரி மாணவர்கள், தன்னார்வலர்கள், மாநகராட்சி பணியாளர்கள் பங்கேற்ற டூவீலர் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
மேயர் சங்கீதா தலைமை வகித்தார். கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி, மாநகர் நல அலுவலர் சரோஜா முன்னிலை வகித்தனர்.
டூவீலர் ஊர்வலம் மாநகராட்சி அலுவலகத்தில் துவங்கி பஸ் ஸ்டாண்டில் முடிவடைந்தது. விழிப்புணர்வு நடன நிகழ்ச்சி நடந்தது.
ஏற்பாடுகளை சுகாதார அலுவலர்கள் திருப்பதி, சுரேஷ், சத்யராஜ், சுகாதார ஆய்வாளர்கள் அபுபக்கர் சித்திக், முத்துப்பாண்டி, துாய்மை இந்தியா திட்டப் பணியாளர்கள் செய்தனர்.