ADDED : பிப் 18, 2026 07:56 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி: சிவகாசியில் மது விலக்கு, ஆயத் தீர்வைத் துறை சார்பில் போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. கலெக்டர் சுகபுத்ரா கொடியசைத்து துவக்கி வைத்தார்.
ஊர்வலத்தில் பங்கேற்ற காரனேசன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் காமராஜர் பூங்காவில் இருந்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக சென்றனர். சப் கலெக்டர் முகமது இர்பான், மதுவிலக்கு ஆயத்தர்வை துறை அலுவலர் ரமேஷ், போலீசார், தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

