UPDATED : ஜூலை 20, 2026 06:47 PM
ADDED : ஜூலை 20, 2026 06:45 PM
அ நிறம் | அளவு
சிவகாசி:சிவகாசி இந்து நாடார் மேல்நிலைப் பள்ளியில் விருதுநகர் ஏ.டி.எஸ்.பி., அலுவலகம் சார்பில் சைபர் கிரைம், ரோடு பாதுகாப்பு சட்டம், குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
ஏ.டி.எஸ்.பி., கருப்பையா தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் , செயலாளர் அண்ணாமலையான், இன்ஸ்பெக்டர் லட்சுமி பிரபா முன்னிலை வகித்தனர். போக்சோ சட்டம், குழந்தை திருமண சட்டம், சைபர் கிரைம், ரோடு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. எஸ்.எஸ்.ஐ., தங்கப்பாண்டி, சமூக ஆர்வலர் அழகு சுந்தரம் கலந்து கொண்டனர்.
