ADDED : டிச 22, 2024 06:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் காமராஜ் பொறியியல், தொழில்நுட்பக் கல்லுாரி சார்பில் பள்ளி மாணவர்கள், மக்களுக்கு உயர்கல்வியின் முக்கியத்துவத்தை ஏற்படுத்துவதற்கான டூவீலர் விழிப்புணர்வு ஊர்வலத்தை கல்லுாரி செயலாளர் தர்மராஜன், இணைச் செயலாளர் முருகன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
ஊர்வலத்திற்கு கல்லுாரி முதல்வர் செந்தில் தலைமை தாங்கினார்.
இந்த விருதுநகர் தேசபந்து மைதானத்தில் இருந்து துவங்கி ஸ்ரீவில்லிப்புத்துார், ராஜபாளையம் வழியாக தென்காசி, திருநெல்வேலி, கோவில்பட்டி வழியாக விருதுநகர் வந்தடையும். இதில் 82 பள்ளிகளுக்கு சென்று மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளது.