ADDED : அக் 30, 2024 04:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : விருதுநகரில் உணவு பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சக்கரவர்த்தி முன்னிலையில், கலெக்டர் ஜெயசீலன் முன்னிலையில் நடந்தது.
இதில் மின்னணு வங்கி, நுகர்வோர் போக்குவரத்து செயலிகள், குழந்தை தொழிலாளர், தேசிய தர நிர்ணய அமைப்பு அறிமுகம், கேர் செயலி, நுகர்வோர் உணவின் தரம், மின்வாரிய சேவைகள் குறைதீர் முறைகள் குறித்து தொடர்புடைய அலுவலர்கள் பேசினர்.
டி.ஆர்.ஓ., ராஜேந்திரன், மாவட்ட வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் அனிதா, தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் மைவிழி செல்வி, முன்னோடி வங்கி மேலாளர் பாண்டிசெல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

