ADDED : டிச 02, 2024 05:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி : சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லுாரியில் விவேகானந்தா கல்வி மன்றம், தேசிய சேவை திட்டம் சார்பில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
ஒருங்கிணைப்பாளர் நளினி வரவேற்றார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் காளிராஜன் துவக்கி வைத்தார். கல்லுாரி முதல்வர் அசோக் தலைமை வகித்தார். பெங்களூர் புத்தா சி.இ.ஓ., குவாண்டம் அறக்கட்டளை நிறுவனர் சந்திரசேகர் பலராம ரெட்டி பேசினார். தொடர்ந்து தியான பயிற்சி நடந்தது. 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். லதா அபிரூபன் கலந்து கொண்டார். நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் ராஜா நன்றி கூறினார். ஏற்பாடுகளை செயற்குழு உறுப்பினர்கள் செய்தனர்.