/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பேனர்/ வீண் * பயன்பாட்டிற்கு வராத அரசு கட்டடங்கள் * கோடிக்கணக்கில் நிதி செலவழித்தும்
/
பேனர்/ வீண் * பயன்பாட்டிற்கு வராத அரசு கட்டடங்கள் * கோடிக்கணக்கில் நிதி செலவழித்தும்
பேனர்/ வீண் * பயன்பாட்டிற்கு வராத அரசு கட்டடங்கள் * கோடிக்கணக்கில் நிதி செலவழித்தும்
பேனர்/ வீண் * பயன்பாட்டிற்கு வராத அரசு கட்டடங்கள் * கோடிக்கணக்கில் நிதி செலவழித்தும்
ADDED : டிச 25, 2024 06:26 AM
அருப்புக்கோட்டை : மாவட்டத்தில் பல்வேறு துறை அரசு கட்டடங்கள் கோடிக்கணக்கான நிதி செலவில் கட்டப்பட்டும் பணி முடிந்து பயன்பாட்டிற்கு வராமல் இருப்பதால் நிதி செலவழித்தும் வீணாகிறது.
மக்கள், அரசு அலுவலர்கள் வசதியாக வந்து செல்லும் வகையில் பல்வேறு அரசு துறை கட்டடங்கள் புதியதாகவும், கூடுதல் வசதிகளுடன் கட்டப்படுகின்றன. மத்திய அரசு, மாநில அரசு நிதி, எம்.எல்.ஏ., எம்.பி., க்கள் நிதி உள்ளிட்ட நிதிகளின் மூலம் ரேஷன் கடைகள், நூலகங்கள், சமுதாய கூடங்கள், குளியலறை, கழிப்பறைகள், நவீன சுகாதார வளாகம், பஸ் ஸ்டாப்புகள் உள்ளிட்டவை கட்டப்படுகின்றன. ஆனால் கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்கள், ஆண்டுகள் ஆகியும் திறக்கப்படாமலேயே உள்ளன. அரசியல் காரணங்களாலும் அதிகாரிகளின் அலட்சிய போக்காலும் கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டு காட்சி பொருளாகவே உள்ளன. இவற்றை மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர எந்தவித நடவடிக்கையும் எடுப்பது இல்லை.
அருப்புக்கோட்டை தாலுகா அலுவலக கட்டடம் 449.11 லட்சம் செலவில் கட்டப்பட்டு முதல்வர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தும், கட்டடத்தில் சிறிய வேலைகள் இருப்பதால் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. இதனால் அலுவலகப் பணியாளர்கள் புதிய கட்டிடத்திற்கு செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர்.
ஒவ்வொரு ஊராட்சியிலும் ரூ.15 லட்சம் நிதியில் கிராம சேவை மைய கட்டிடம் கட்டப்பட்டது. ஆனால், 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் பெரும்பாலான கட்டடங்கள் பயன்பாட்டிற்கு வராமலேயே சேதம் அடைந்து விட்டது.
இதேபோன்று அருப்புக்கோட்டை புதிய பஸ் ஸ்டாண்ட் கோடிக்கணக்கான ரூபாய்கள் செலவழித்து இடித்து கட்டப்பட்டு வருகிறது. ஒரு ஆண்டு ஆகியும் பணிகள் முடியாமல் மந்தகதியில் நடப்பதால் பஸ் ஸ்டாண்ட் இல்லாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையிலும் கோடிகள் செலவழித்து கட்டப்பட்டு வரும் மருத்துவமனை கூடுதல் கட்டடங்கள் பணிகளும் மெத்தனமாக நடக்கின்றன.
பணிகளை பெறும் ஒப்பந்ததாரர்களை குறிப்பிட்ட நாளில் பணிகளை முடிக்க அதிகாரிகள் அறிவுறுத்துவது இல்லை. முறையான ஆய்வு செய்வதும் இல்லை. இதனால் பணிகள் ஒப்பந்த காலம் முடிவடைந்த பின்பும் நடந்து வருகிறது. முடிந்த கட்டடங்களை மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதிலும் அலட்சியம் காட்டுவதால் பல கட்டடங்கள் காட்சி பொருளாகவே உள்ளன.
மாவட்ட நிர்வாகம் இது குறித்து ஆய்வு செய்து அரசு கட்டடங்களை மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.