
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர பந்தலில் சாணக்கியா குரு சேனல் சார்பில் மாதங்களில் மார்கழி ஆன்மிக நிகழ்ச்சியின் இரண்டாம் நாளான நேற்று பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது.
சேனலின் தலைமை செயல் அதிகாரி ரெங்கராஜ் பாண்டே தலைமை வகித்தார். வித்யா லட்சுமி வித்யநாத் குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது.
விழாவில் பா.ஜ. மாவட்ட தலைவர் சரவணன் துரை, புலவர் பாலகிருஷ்ணன், ஆன்மிக பேச்சாளர் ராஜாராம் மற்றும் திரளான மக்கள் பங்கேற்றனர். மூன்றாம் நாளான இன்று மாலை 6:00 மணிக்கு பாரதி திருமகன் குழுவினரின் சிறப்பு வில்லிசை கச்சேரி நடக்கிறது.

