ADDED : அக் 05, 2025 01:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்:விருதுநகர் அருகே கோவில்வீரார்பட்டி தம்பதி அய்யனார் - தேவகி. இவர்களது மகன் அரவிந்த் 5.
இவர்கள் மூவரும் டூவீலரில் நேற்று மாலை 6:50 மணிக்கு மலைப்பட்டியில் உள்ள கோயிலுக்கு சென்று திரும்பினர்.மலைப்பட்டி - கோவில்வீரார்பட்டி இடையே உள்ள தரைப்பாலத்தில் கனமழையால் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தை கடக்க முயன்ற போது வெள்ளத்தில் சிக்கிய மூவரும் அடித்துச் செல்லப்பட்டனர்.
தம்பதி பத்திரமாக கரைக்கு வந்தனர். சிறுவன் அரவிந்த் வெள்ளத்தில் சிக்கி பலியானார். தீயணைப்புத்துறையினர் சிறுவனின் உடலை நேற்றிரவு 8:30 மணிக்கு மீட்டனர். வச்சக்காரப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.