/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
/
குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
ADDED : நவ 13, 2024 06:40 AM

சிவகாசி : சிவகாசி தேரடி முக்கில் குழாய் உடைந்து குடிநீர் சாக்கடையில் கலந்து வீணாவதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
சிவகாசி சேர்மன் சண்முகம் நாடார் ரோட்டில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியில் இருந்து நகர் முழுவதும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகின்றது.
புதுத்தெரு, அம்மன் கோவில் பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்வதற்காக முருகன் கோயில், தேரடி முக்கு வழியாக குழாய் பதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தேரடி முக்கில் குழாய் உடைந்து மூன்று மணி நேரத்திற்கு மேலாக குடிநீர் முழுவதும் வீணாகி சாக்கடையில் கலந்து ஓடியது. இதனால் அப்பகுதி முழுவதும் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்புள்ளது.
எனவே உடனடியாக சேதம் அடைந்த குழாயினை சரி செய்து குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

