sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

மகப்பேறு பிரிவில் 'கவனிப்பு'; ஒப்பந்த பணியாளர்களால் கர்ப்பிணிகள் தவிப்பு

/

மகப்பேறு பிரிவில் 'கவனிப்பு'; ஒப்பந்த பணியாளர்களால் கர்ப்பிணிகள் தவிப்பு

மகப்பேறு பிரிவில் 'கவனிப்பு'; ஒப்பந்த பணியாளர்களால் கர்ப்பிணிகள் தவிப்பு

மகப்பேறு பிரிவில் 'கவனிப்பு'; ஒப்பந்த பணியாளர்களால் கர்ப்பிணிகள் தவிப்பு


ADDED : டிச 06, 2024 04:56 AM

Google News

ADDED : டிச 06, 2024 04:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனை, மகப்பேறு பிரிவில் அனுமதிக்கப்படுபவர்களை உடன் இருந்து பார்த்துக்கொள்பவர்களிடம் ஒப்பந்த பணியாளர்கள் சிலர் பணம் கேட்டு பெறுகின்றனர். மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனை செயல்பாட்டிற்கு வந்த இரண்டு ஆண்டுகளில் சிகிச்சைக்காக வருபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இங்குள்ள மகப்பேறு மருத்துவமனையில் தாய்பால் வங்கி, குழந்தை கடத்தலை தடுக்க சென்சார் உள்ளிட்ட நவீன வசதிகள் இருப்பதால் பரிசோதனை, சிகிச்சைக்காக பலரும் வந்து செல்கின்றனர். செயற்கை கருத்தரித்தல் மையங்களில் சிகிச்சை பெற்றவர்கள் அரசு மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நடக்கும் பிரசவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இங்கு உள்நோயாளிகள், பிரசவத்திற்காக அனுமதிக்கப்படுபவர்களை பரிசோதனை, சிகிச்சை அளிக்க அழைத்து செல்லும் ஒப்பந்த பணியாளர்களில் சிலர், நோயாளை உடன் இருந்து பார்த்துக்கொள்பவர்களிடம் பணம் கேட்டு பெறுகின்றனர்.

இதனால் தங்கள் பணியை சரியாக செய்யும் பணியாளர்களுக்கும் அவப்பெயர் ஏற்படுகிறது. பணம் பெறும் ஊழியர்கள் பற்றிய புகார்கள் மருத்துவமனை நிர்வாகத்திற்கு சென்று, அவர்களும் நடவடிக்கை எடுக்கின்றனர். ஆனால் அரசியல் பின்புலத்தால் மீண்டும் அதே பணிக்கு வந்து தங்கள் கைவரிசையை தொடர்ந்து நடத்துகின்றனர்.

அரசு மருத்துவமனைக்கு வரும் பெரும்பாலானோர் எளிய குடும்ப பின்னணி உடையவர்கள். மாவட்டத்தின் பிற பகுதிகளில் இருந்து வந்து உள்நோயாளிகளாக சிகிச்சை பெறுபவர்களுக்கு மூன்று வேளை உணவும் மருத்துவமனையில் வழங்கப்படுகிறது. உடன் இருந்து பார்த்துக்கொள்பவர்கள் மூன்று வேளையும் உணவகங்களில் சாப்பிட்டு தங்கி கவனித்து வருகின்றனர்.

இவர்களிடம் சில ஒப்பந்த பணியாளர்கள் பணம் கேட்பதால் பலரும் மனமுடைந்து வருகின்றனர். எனவே விருதுநகர் அரசு மருத்துவமனை, மகப்பேறு பிரிவுகளில் பணம் கேட்கும் பணியாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us