/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நாரணாபுரம் விலக்கில் சேதமான ரோட்டால் விபத்திற்கு வாய்ப்பு
/
நாரணாபுரம் விலக்கில் சேதமான ரோட்டால் விபத்திற்கு வாய்ப்பு
நாரணாபுரம் விலக்கில் சேதமான ரோட்டால் விபத்திற்கு வாய்ப்பு
நாரணாபுரம் விலக்கில் சேதமான ரோட்டால் விபத்திற்கு வாய்ப்பு
ADDED : அக் 02, 2024 06:57 AM

சிவகாசி : சிவகாசி நாரணாபுரம் விலக்கு பஸ் ஸ்டாப் அருகே சென்டர் மீடியனை ஒட்டி சேதமடைந்த ரோட்டினால் போக்குவரத்து இடையூறு ஏற்படுவதோடு விபத்திற்கும் வழி வகுக்கிறது.
சிவகாசி நாரணாபுரம் விலக்கு பஸ் ஸ்டாப்பில் இருந்து பைபாஸ் ரோட்டில் சென்டர் மீடியன் அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே குறுகலாக இருந்த ரோட்டில் சென்டர் மீடியன் அமைக்கப்பட்டதால் ரோடு மிகவும் குறுகிவிட்டது. பஸ் ஸ்டாண்ட் செல்வதற்கு மட்டுமின்றி இப்பகுதி மெயின் பஜார் என்பதால் எப்பொழுதுமே இந்த ரோட்டில் போக்குவரத்து நிறைந்திருக்கும்.
இந்நிலையில் நாரணாபுரம் பஸ் ஸ்டாப் அருகே ரோடு சேதம் அடைந்து மிகப்பெரிய பள்ளமாக காட்சியளிக்கிறது. குறுகிய ரோட்டில் பெரிய பள்ளம் இருப்பதால் டூவீலர் உட்பட எந்த வாகனமும் எளிதில் செல்ல முடியவில்லை. மேலும் சைக்கிளில் செல்கின்ற பள்ளி மாணவர்கள் அடிக்கடி தடுமாறி கீழே விழுகின்றனர்.
தவிர அடிக்கடி போக்குவரத்து இடையூறு ஏற்படுவதோடு விபத்தும் ஏற்படுகின்றது. எனவே இப்பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி சேதமடைந்த ரோட்டை சீரமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.