/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
செங்கமலப்பட்டி - விருதுநகர் ரோடு சேதம்: வாகன ஓட்டிகள் அவதி
/
செங்கமலப்பட்டி - விருதுநகர் ரோடு சேதம்: வாகன ஓட்டிகள் அவதி
செங்கமலப்பட்டி - விருதுநகர் ரோடு சேதம்: வாகன ஓட்டிகள் அவதி
செங்கமலப்பட்டி - விருதுநகர் ரோடு சேதம்: வாகன ஓட்டிகள் அவதி
ADDED : நவ 21, 2024 04:07 AM

சிவகாசி: சிவகாசி செங்கமலப் பட்டியில் இருந்து சூரம்பட்டி வழியாக விருதுநகர் செல்லும் ரோடு சேதம் அடைந்திருப்பதால் 5 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் இருந்து சூரம்பட்டி வழியாக அனுப்பன்குளம், நாரணாபுரம், ஆலமரத்துப்பட்டி, செங்கமலப்பட்டி உள்ளிட்ட கிராம மக்கள் பல்வேறு தேவைகளுக்கு விருதுநகருக்கு சென்று வருகின்றனர். இதே ரோட்டில் 50 க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் உள்ளன. தொழிலாளர்களை ஏற்றி வரும் வாகனங்களும் இந்த ரோட்டில் தான் வர வேண்டும்.
இந்த ரோடு போடப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில் தற்போது முற்றிலும் சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறிவிட்டது. மழைக்காலங்களில் ரோடு போக்குவரத்திற்கு பயனற்றதாக மாறிவிடுகின்றது. இதனால் இப்பகுதியினர் கூடுதலாக 10 கிலோமீட்டர் சுற்றி விருதுநகருக்கு செல்ல வேண்டியுள்ளது. எனவே இப்பகுதி மக்கள், தொழிலாளர்களின் நலம் கருதி சேதமடைந்த ரோட்டினை உடனடியாக சீரமைக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

