sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

செங்கமலப்பட்டி - விருதுநகர் ரோடு சேதம்: வாகன ஓட்டிகள் அவதி

/

செங்கமலப்பட்டி - விருதுநகர் ரோடு சேதம்: வாகன ஓட்டிகள் அவதி

செங்கமலப்பட்டி - விருதுநகர் ரோடு சேதம்: வாகன ஓட்டிகள் அவதி

செங்கமலப்பட்டி - விருதுநகர் ரோடு சேதம்: வாகன ஓட்டிகள் அவதி


ADDED : நவ 21, 2024 04:07 AM

Google News

ADDED : நவ 21, 2024 04:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி: சிவகாசி செங்கமலப் பட்டியில் இருந்து சூரம்பட்டி வழியாக விருதுநகர் செல்லும் ரோடு சேதம் அடைந்திருப்பதால் 5 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் இருந்து சூரம்பட்டி வழியாக அனுப்பன்குளம், நாரணாபுரம், ஆலமரத்துப்பட்டி, செங்கமலப்பட்டி உள்ளிட்ட கிராம மக்கள் பல்வேறு தேவைகளுக்கு விருதுநகருக்கு சென்று வருகின்றனர். இதே ரோட்டில் 50 க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் உள்ளன. தொழிலாளர்களை ஏற்றி வரும் வாகனங்களும் இந்த ரோட்டில் தான் வர வேண்டும்.

இந்த ரோடு போடப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில் தற்போது முற்றிலும் சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறிவிட்டது. மழைக்காலங்களில் ரோடு போக்குவரத்திற்கு பயனற்றதாக மாறிவிடுகின்றது. இதனால் இப்பகுதியினர் கூடுதலாக 10 கிலோமீட்டர் சுற்றி விருதுநகருக்கு செல்ல வேண்டியுள்ளது. எனவே இப்பகுதி மக்கள், தொழிலாளர்களின் நலம் கருதி சேதமடைந்த ரோட்டினை உடனடியாக சீரமைக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us