நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார்: சாத்துார் பி. எஸ்.என்.எல்.பி.எட்., கல்லுாரி 18ம் ஆண்டு விழா நடந்தது.
கல்லுாரி தலைவர் ராஜீ தலைமை வகித்தார். துணைத் தலைவர் பாப்பா ராஜீ, செயலாளர் முத்துக் குமார் முன்னிலை வகித்தனர். நிர்வாக அலுவலர் மாரிக் காளை வரவேற்றார். பேராசிரியர் சகிலா சித்ரா செல்வி வாழ்த்தினார்.
முதல்வர் ராஜேஸ்வரி ஆண்டறிக்கை வாசித்தார். எஸ். பி. கண்ணன் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசினார். கலை நிகழ்ச்சிகள் நடந்தது. டி.எஸ்.பி நாகராஜன், பேராசிரியர்கள், அலுவலர்கள்,பெற்றோர், மாணவர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.பேராசிரியர் ஜெயசித்ரா நன்றி கூறினார்.