ADDED : ஜன 21, 2024 03:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தளவாய்புரம்: தமிழ்நாடு விவசாயி சங்கம் சார்பில் ஸ்ரீவில்லிபுத்துாரில் நடக்கவுள்ள விவசாயிகள் மாவட்ட மாநாடு குறித்து டூவீலர் பிரச்சார விளக்க பேரணி நடந்தது.
இ.கம்யூ., மாவட்ட செயலாளர் லிங்கம் துவக்கி வைத்தார். விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் அய்யன் தலைமை வகித்தார். ஒன்றிய கவுன்சிலர் பகத்சிங், சுப்ரமணி, வீராசாமி, அமுல்ராஜ் கலந்து கொண்டனர்.
தேவதானம் காமராஜர் நகர், சேத்துார், மேட்டுப்பட்டி முத்துச்சாமிபுரம், செட்டியார் பட்டி, தளவாய்புரம், சத்திரப்பட்டி ராஜபாளையம் வழியே நிறைவு பெற்றது.

