/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தென்னை மரங்களுக்கு பயிர் காப்பீடு
/
தென்னை மரங்களுக்கு பயிர் காப்பீடு
ADDED : ஜன 01, 2026 05:55 AM
ராஜபாளையம்: தென்னை மரங்களுக்கு சிறப்பு பயிர் காப்பீட்டு திட்டம் தொடங்கப்பட்டுள்ள நிலையில் ராஜபாளையம் பகுதி தென்னை விவசாயிகள் பயன்பெற தோட்டக்கலைத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் சுப வாசுகி கூறியதாவது: விருதுநகர் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார், வத்திராயிருப்பு பகுதிகளில் 26 ஆயிரத்திற்கும் அதிகமான ஏக்கர் பரப்பளவில் தென்னை சாகுபடி நடந்து வருகிறது.
நோய் தாக்குதல், இயற்கை சீற்றங்களால் பாதிப்பிற்கு உள்ளாகும் தென்னை மரங்களுக்கு இழப்பீடு வழங்கும் வகையில் பயிர் காப்பீட்டு திட்டம் இன்சூரன்ஸ் கம்பெனி, தென்னை வளர்ச்சி வாரியம், தோட்டக்கலைத்துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதில் நன்கு காய்க்கும் பருவமுள்ள நெட்டை, குட்டை ரக தென்னை மரங்களுக்கு பயிர் காப்பீடு செய்யலாம். 15 வயது வரையிலான ஒரு மரத்துக்கு ரூ. 900 இழப்பீடு வழங்கும் திட்டத்தில் மரத்துக்கு ரூ.2.25 வீதமும், 16 லிருந்து 60 வயது உள்ள மரத்துக்கு ரூ.1,750 இழப்பீடு வழங்கும் திட்டத்திற்கு ரூ.3.50 வீதம் ஆண்டு தவணை செலுத்த வேண்டும்.
காப்பீட்டு திட்டத்தில் தென்னை விவசாயிகள் சேர்ந்து பயன்பெற வேண்டும். மேலும் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் , என அவர் தெரிவித்துள்ளார்.

