sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

விவசாய கடனுக்கான வட்டி மானியம் வருவதில் தாமதம்: வலுவிழக்கும் வேளாண் கூட்டுறவு சங்கங்கள்

/

விவசாய கடனுக்கான வட்டி மானியம் வருவதில் தாமதம்: வலுவிழக்கும் வேளாண் கூட்டுறவு சங்கங்கள்

விவசாய கடனுக்கான வட்டி மானியம் வருவதில் தாமதம்: வலுவிழக்கும் வேளாண் கூட்டுறவு சங்கங்கள்

விவசாய கடனுக்கான வட்டி மானியம் வருவதில் தாமதம்: வலுவிழக்கும் வேளாண் கூட்டுறவு சங்கங்கள்


ADDED : ஏப் 11, 2025 04:23 AM

Google News

ADDED : ஏப் 11, 2025 04:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழகத்தில் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு பல்வேறு வகை கடன்கள் வட்டியின்றி வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு சங்கங்கள் சார்பில் வழங்கப்படும் வட்டியில்லாத கடன்களுக்கு மாநில அரசுக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில் மத்திய அரசின் நபார்டு வங்கி மூலம் வட்டி மானியம்வழங்கப்படும்.

நபார்டு வங்கியானது, வட்டி மானியத்தை சென்னை தமிழ்நாடு தலைமை கூட்டுறவு வங்கிக்கு வழங்கும். அவர்களிடம் இருந்து அந்தந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு வழங்கப்படும். அங்கிருந்து தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களுக்கு நிதி வழங்கப்படும்.

இந்நிலையில் 6 மாதங்களாக சங்கங்கள் மூலம் வழங்கப்பட்ட கடன்களுக்கான வட்டி மானிய நிதிக்கான பணத்தை நபார்டு வங்கி தரவில்லை. வழக்கமாக நபார்டு 2 முதல் 3 மாதத்தில் வட்டி மானியம் கொடுப்பர். தற்போது6 மாத நிலுவை என்பது சங்கங்களை நெருக்கடிக்கு ஆளாக்கி வருகிறது. தலைவர்கள், நிர்வாக குழு உறுப்பினர்கள் இருந்த காலத்தில் உரிய அழுத்தம் அளித்து பெற்று தந்தனர்.

அவர்களின் பதவிக்காலம் காலாவதியாகி விட்ட நிலையில் சிறப்பு அலுவலர்களாக துணை பதிவாளர்கள் செயல்படுகின்றனர். தற்போது முன்பு போன்று அழுத்தம் கொடுக்காமல் உள்ளதால், நாளுக்கு நாள் சங்க செயல்பாடுகள் வலுவிழந்து வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் ரூ.25 கோடி வட்டி மானியம் வர வேண்டியுள்ளது. இதே போல் 37 மாவட்டங்களிலும் வட்டி மானியம் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் சிறப்பு அலுவலர்கள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் பொதுமேலாளர்களுக்கு கோரிக்கை கடிதம் அனுப்பவும், அங்கிருந்து மாநில அரசுக்கு கோரிக்கை அனுப்பவும் விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us