ADDED : ஆக 09, 2026 12:14 AM

அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே அரசு ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பழைய ஓய்வூதியம் அமல்படுத்துதல் உட்பட 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தலைவர் பாலகிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் செயலாளர் சிவபெருமான், மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு மாவட்ட தலைவர் சந்தியாகப்பன், ஓய்வு பெற்ற பள்ளி கல்லுாரி ஆசிரியர் நலச்சங்கத்தின் மாவட்ட செயலாளர் வேலுசாமி உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
