/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சதுரகிரியில் அமாவாசை வழிபாடு திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்
/
சதுரகிரியில் அமாவாசை வழிபாடு திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்
சதுரகிரியில் அமாவாசை வழிபாடு திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்
சதுரகிரியில் அமாவாசை வழிபாடு திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்
ADDED : மார் 30, 2025 04:41 AM
வத்திராயிருப்பு : சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் பங்குனி மாத அமாவாசை வழிபாடு சிறப்புடன் நடந்தது.
இதனை முன்னிட்டு நேற்று அதிகாலை முதல் தாணிப்பாறை மலை அடிவாரத்தில் ஏராளமான வெளி மாவட்ட பக்தர்கள் குவிந்திருந்தனர். காலை 6:00 மணிக்கு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர்.
கோயிலில் சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு அமாவாசை வழிபாடு பூஜைகளை கோயில் பூஜாரிகள் செய்தனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
விழா ஏற்பாடுகளை அறங்காவலர் ராஜா பெரியசாமி, செயல் அலுவலர் ராமகிருஷ்ணன், அறநிலைத்துறையினர் செய்திருந்தனர். வத்திராயிருப்பு, சாப்டூர் வனத்துறையினர், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஸ்ரீவில்லிபுத்துாரிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.