/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
திருத்தங்கலில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
/
திருத்தங்கலில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
ADDED : ஜன 03, 2024 05:40 AM

சிவகாசி: திருத்தங்கலில் பழைய வெள்ளையாபுரம் ரோட்டில் பல இடங்களில் குழாய் உடைந்து குடிநீர் வீணாவதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
திருத்தங்கல் பழைய வெள்ளையாபுரம் ரோட்டில் போலீஸ் ஸ்டேஷன் அருகே தரை நீர்த்தேக்க நிலையமும் மேல்நிலை குடிநீர் தொட்டியும் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கிருந்து நகர் முழுவதும் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வினியோகம் செய்யப்படுகின்றது.
இந்நிலையில் நீர் தேக்க தொட்டி அருகிலும் பழைய வெள்ளையாபுரம் ரோட்டிலும் பல இடங்களில் அடுத்தடுத்து குழாய் உடைந்து குடிநீர் வெளியேறி ரோட்டில் ஓடுகின்றது.
திருத்தங்கல் பகுதியில் கடந்த காலங்களில் 30 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில் 3 மாதங்களுக்கு முன்பிருந்து 20 நாட்களுக்கு ஒரு முறை வினியோகம் செய்யப்பட்டு வருகின்றது.
இதுவும் அனைவருக்கும் போதாத நிலையில், அனைவரும் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்துகின்றனர்.
இந்நிலையில் குழாய் உடைந்து குடிநீர் வீணாவதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். எனவே உடைந்த குழாய்களை சரி செய்து குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.