ADDED : செப் 07, 2025 02:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம்: ராஜபாளையம் மின் கோட்ட செயற்ப்பொறியாளர் முத்துராஜ் செய்தி குறிப்பு:
ராஜபாளையம் தாலுகா மக்களின் மின்சாரம் தொடர்பான நீண்ட காலமாக தீர்க்கப்படாத பிரச்சனைகள், இதர குறைகளை தீர்க்கும் வகையில், விருதுநகர் மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் லதா, ராஜபாளையம் பொன்னகரம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் செப். 9- காலை 11:00 மணி முதல் குறைகளை கேட்டறிய இருப்பதால், மின் நுகர்வோர்கள் தங்கள் மின்வாரிய சம்பந்தப்பட்ட குறைகளை நேரில் தெரிவித்து பயனடைவதுடன், மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரி வித்துள்ளார்.