sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 13, 2025 ,ஐப்பசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

 சிதிலமடைந்து வரும் விருதுநகர் நகராட்சி கட்டடம் புதுப்பிக்க எதிர்பார்ப்பு 

/

 சிதிலமடைந்து வரும் விருதுநகர் நகராட்சி கட்டடம் புதுப்பிக்க எதிர்பார்ப்பு 

 சிதிலமடைந்து வரும் விருதுநகர் நகராட்சி கட்டடம் புதுப்பிக்க எதிர்பார்ப்பு 

 சிதிலமடைந்து வரும் விருதுநகர் நகராட்சி கட்டடம் புதுப்பிக்க எதிர்பார்ப்பு 


ADDED : நவ 12, 2025 11:56 PM

Google News

ADDED : நவ 12, 2025 11:56 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகர் நகராட்சி அலுவலகத்தின் பழமையான கட்டடம் சிதிலமடைந்து வரும் நிலையில் அதை புதுப்பிக்க நிதி ஒதுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

விருதுநகர் நகராட்சி அலுவலகக் கட்டடம் நுாறு ஆண்டுகளை கடந்து நிற்கிறது. தற்போது மேற்பகுதி சுவர்கள் முழுவதும் சிதிலமடைந்து உடைந்து விழும் நிலையில் உள்ளது.

அப்போதைய ராமநாதபுரம் மாவட்டத்தில், விருதுநகர் நகராட்சியானது 1915ல் மூன்றாம் நிலை நகராட்சியாக துவங்கப்பட்டது. இதில் முன்னாள் முதல்வர் காமராஜர்நகராட்சி தலைவராக பணியாற்றினார் என்ற பெருமை உள்ளது.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1924ல் விருதுநகர் நகராட்சி அலுவலகக் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது. விருதுநகரில் உள்ள பழமையான கட்டடங்களில் ஒன்றாக நகராட்சி அலுவலகமும் உள்ளது.

இக்கட்டடமானது சுண்ணாம்பு, செங்கல் உள்ளிட்ட அக்காலத்தைய கட்டுமானப் பொருட்களைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது.

ராஜா மாளிகை என அழைக்கப்படும் முதல் தளத்தில் கூட்டமன்ற அறை உள்ளது. அங்கு செல்வதற்கான படிக்கட்டுகள் அனைத்தும் கற்களால் சுழல் வடிவத்தில் கட்டப்பட்டுள்ளது. 2014ல் இந்நகராட்சி நுாற்றாண்டு விழாவைக் கொண்டாடியது. அப்போது தமிழக அரசு ரூ.25 கோடி வளர்ச்சி திட்டப் பணிகளுக்கு ஒதுக்கீடு செய்தது. இதில் நகராட்சி அலுவலகத்தின் பின் பகுதியில் மட்டும் புதிய கட்டடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்நகராட்சி கட்டடத்தை தொடர்ந்து பராமரிப்பு செய்யாத காரணத்தால் கூட்ட அறையின் கூரையில் மழை நீர் ஒழுகுகிறது. மேலும் சுற்றுச் சுவர் அனைத்தும் பெயர்ந்து விழுகிறது.

இதனால் நகராட்சிக் கட்டடம் பொலி விழந்து காணப்படுகிறது. தரைத் தளத்தில் கமிஷனர், மேலாளர் அலு வலக அறைகள், வருவாய் பிரிவு, கணக்குப் பிரிவு உள்ளிட்ட அலுவலகங்கள் உள்ளன. எப்போது இக்கட்டடம் உடைந்துவிழுந்து விடுமோ என்ற அச்சத்தில் அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர். நகராட்சிக்கு வரும் மக்களும் அச்சத்துடனே கட்டடத்தை பார்க்கின்றனர்.

எனவே அரசுநுாற் றாண்டு கண்ட விருதுநகர் நகராட்சி அலுவலகக் கட்டடத்தை அதன் பழமை மாறாமல் புதிய அலுவலகம் கட்ட தேவையான நிதியை ஒதுக்கீடு செய்து தர வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us