sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

காக்கிவாடன் பட்டி சிறுவர் பூங்காவில் விளையாட்டு உபகரணங்கள் சேதம் சீரமைக்க எதிர்பார்ப்பு

/

காக்கிவாடன் பட்டி சிறுவர் பூங்காவில் விளையாட்டு உபகரணங்கள் சேதம் சீரமைக்க எதிர்பார்ப்பு

காக்கிவாடன் பட்டி சிறுவர் பூங்காவில் விளையாட்டு உபகரணங்கள் சேதம் சீரமைக்க எதிர்பார்ப்பு

காக்கிவாடன் பட்டி சிறுவர் பூங்காவில் விளையாட்டு உபகரணங்கள் சேதம் சீரமைக்க எதிர்பார்ப்பு


ADDED : செப் 30, 2025 03:44 AM

Google News

ADDED : செப் 30, 2025 03:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி: வெம்பக்கோட்டை ஒன்றியம் காக்கி வாடன்பட்டி சிறுவர் பூங்காவில் விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்துள்ளது. இதனை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சிறுவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

வெம்பக்கோட்டை ஒன்றியம் காக்கி வாடன்பட்டியில் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு அம்மா பூங்கா என்ற பெயரில் சிறுவர் பூங்கா துவக்கப்பட்டது.

இதில் சிறுவர்கள் விளையாடும் வகையில் ஊஞ்சல், சறுக்கு உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

சில ஆண்டுகள் மட்டுமே பயன்பாட்டில் இருந்த இந்தப் பூங்கா தற்போது சிதைந்து விட்டது. இங்குள்ள ஊஞ்சல், சறுக்கு போன்ற விளையாட்டு உபகரணங்கள் சேதம் அடைந்து விட்டது. இதனால் சிறுவர்கள் பொழுதுபோக்க வழியில்லாமல் சிரமப்படுகின்றனர்.

ஒரு சில சிறுவர்கள் சேதமடைந்த விளையாட்டு உபகரணங்களில் விளையாடி காயமடைகின்றனர்.

எனவே உடனடியாக அனைத்து விளையாட்டு உபகரணங்களையும் சரி செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சிறுவர்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us