sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

விபத்தில்லாமல் பட்டாசு உற்பத்தி குறித்து தீவிரமாக கண்காணிக்க வேண்டும்

/

விபத்தில்லாமல் பட்டாசு உற்பத்தி குறித்து தீவிரமாக கண்காணிக்க வேண்டும்

விபத்தில்லாமல் பட்டாசு உற்பத்தி குறித்து தீவிரமாக கண்காணிக்க வேண்டும்

விபத்தில்லாமல் பட்டாசு உற்பத்தி குறித்து தீவிரமாக கண்காணிக்க வேண்டும்


ADDED : பிப் 07, 2025 03:59 AM

Google News

ADDED : பிப் 07, 2025 03:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர், சிவகாசி, சாத்துார், வெம்பக்கோட்டை சுற்று பகுதிகளில் நாக்பூர், சென்னை, டி.ஆர்.ஓ., பெற்ற 1080 பட்டாசு ஆலைகள். இதில் விபத்தில்லாமல் பட்டாசு உற்பத்தி செய்வது குறித்தும், பாதுகாப்பு கட்டமைப்புகளை மேம்படுத்துவது குறித்தும் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாதம்தோறும் பட்டாசு உற்பத்தியாளர்கள்சங்கங்கள் மற்றும் அதிகாரிகளுடன் பாதுகாப்பு குழு கூட்டம் நடத்தப்படுகிறது.

ஆனால் எதிர்பாராத விதமாக விபத்து ஏற்படுகிறது. இதனைத் தொடர்ந்து 2024 இறுதியில், பட்டாசு ஆலைகளில் விபத்தினை தடுப்பதற்காக, பட்டாசு ஆலைகளை குத்தகை, உள்குத்தகைக்கு விடமாட்டேன். உரிமத்தில்அனுமதிக்கப்பட்ட பட்டாசுகளை மட்டும் உற்பத்தி செய்வேன்.

உச்சநீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட சரவெடி உற்பத்தி செய்தாலோ, இருப்பு வைத்தாலோ விசாரணையின்றி உரிமத்தை ரத்து செய்யலாம். பட்டாசு ஆலை உரிம வரைபடத்தில் அனுமதிக்கப்பட்ட பணியாளர்களை மட்டுமே பட்டாசு உற்பத்தியில் ஈடுபடுத்துவேன். திறந்த வெளியிலோ, மரத்தடியிலோ பட்டாசு உற்பத்தி செய்ய மாட்டேன்.

தொழிலாளர்களுக்கு உரிய பயிற்சி மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள்வழங்கி தொழிலாளர்களின் பாதுகாப்புக்கு உறுதியளிப்பேன். ஜி.எஸ்.டி., வரியை முறையாக செலுத்துவேன். தடை செய்யப்பட்ட மூலப்பொருட்கள், தடை செய்யப்பட்ட பட்டாசுகளை உற்பத்தி செய்ய மாட்டேன். குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்த மாட்டேன். வெடிபொருள் சட்டத்திற்கு உட்பட்டு பட்டாசு உற்பத்தி செய்கிறேன்.

இதில் விதிமீறல் தெரிய வந்தால் உரிமத்தை ரத்து செய்யலாம், உள்ளிட்ட 10 விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றுவேன் என, ஒவ்வொரு பட்டாசு ஆலை உரிமையாளர்களிடமும் சம்பந்தப்பட்ட உறுதிமொழி பிரமாண பத்திரம்பெற்று சமர்ப்பிக்க வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டிருந்தார்.

ஆனால் இவற்றில் பெரும்பாலான விதிமுறைகளை ஒருசில பட்டாசு ஆலைகள் பின்பற்றுவதில்லை. இதனாலேயே தொடர் விபத்துகள் ஏற்படுகிறது. இந்த ஆண்டின் துவக்கத்தில் விருதுநகர் அருகே நடந்த பட்டாசு ஆலை வெடிவிபத்தில் ஆறு பேர் பலியாகினர்.

இரு நாட்களுக்கு முன்பு நடந்த வெடி விபத்தில் ஒருவர் பலியானார். ஆறு பேர் காயமடைந்தனர். இந்த இரு விபத்துகளுக்கு முக்கிய காரணம் பட்டாசு ஆலைகள் குத்தகைக்கு விடப்பட்டதே.

சிவகாசி அருகே மண் குண்டாம் பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் மணி மருந்து இருப்பு வைக்கப்பட்டிருந்ததால் வெடி விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக தொழிலாளர்கள் இல்லாததால் உயிர் சேதம் இல்லை. கலெக்டர் உத்தரவிட்டும்இதுபோன்று விதிமுறைகளை பின்பற்றாததால் அடுத்தடுத்து வெடி விபத்துக்கள் நடந்து வருகிறது.

எனவே இது குறித்து தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us