sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

பட்டாசு ஆலை தொழிலாளர்களுக்கு பயிற்சி தேவை: பொதுமக்கள் எதிர்பார்ப்பு

/

பட்டாசு ஆலை தொழிலாளர்களுக்கு பயிற்சி தேவை: பொதுமக்கள் எதிர்பார்ப்பு

பட்டாசு ஆலை தொழிலாளர்களுக்கு பயிற்சி தேவை: பொதுமக்கள் எதிர்பார்ப்பு

பட்டாசு ஆலை தொழிலாளர்களுக்கு பயிற்சி தேவை: பொதுமக்கள் எதிர்பார்ப்பு


ADDED : நவ 08, 2024 03:49 AM

Google News

ADDED : நவ 08, 2024 03:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாவட்டத்தில் சிவகாசி, சாத்துார் வெம்பக்கோட்டை, விருதுநகர் பகுதியில் நாக்பூர், சென்னை, டி.ஆர்.ஓ., உரிமம் பெற்ற 1080 பட்டாசு ஆலைகள் உள்ளன. இப்பகுதியில் ஒரு சில பட்டாசு ஆலைகளில் விதி மீறல்களால் அவ்வப்போது வெடி விபத்து ஏற்படுகின்றது.

எப்போதாவது எதிர்பாராத விதமாக ஆலைகளில் விபத்து ஏற்படுவது இயல்புதான். அதே சமயத்தில் விதி மீறல்களாலும் மனித தவறுகளாலும் ஏற்படும் வெடி விபத்தினை ஏற்றுக் கொள்ள முடியாது.

ஏனெனில் கடந்த காலங்களில் ஏற்பட்ட வெடி விபத்திற்கு முக்கிய காரணமாக பட்டாசு ஆலைகளில் பணிபுரியும் போர்மென்ட்கள், மேலாளர்கள் தொழிலாளர்களுக்கு போதிய பயிற்சி இல்லாததால் விபத்து ஏற்பட்டுள்ளது தெரிய வந்தது.

இதனை தவிர்ப்பதற்காக சிவகாசியில் உள்ள தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு பயிற்சி மையத்தில் ஒவ்வொரு வாரமும் 35 ஆலைகளில் பணிபுரியும் போர்மேன்கள், மேலாளர்களுக்கு பாதுகாப்பு பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது. இங்கு பயிற்சி பெற்ற இவர்கள் தங்கள் ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஆலோசனை வழங்குவர்.

கடந்த காலங்களில் பெரும்பான்மையான பட்டாசு ஆலைகளிலிருந்து போர்மென்கள், மேலாளர்கள் பயிற்சிக்குச் செல்லவில்லை.

அதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம், தொழிலக பாதுகாப்பு பயிற்சி மையம் சார்பில் முதல் முறை பயிற்சிக்கு வர தவறினால் ரூ. 5000 இரண்டாம் முறை வரத் தவறினால் ரூ. 10,000 அபராதம் விதிக்கப்படும், மூன்றாம் முறை வரத் தவறினால் ஆலையின் உரிமம் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்ட பின்னரே ஆலைகளில் பணிபுரியும் போர்மேன்கள், மேலாளர்கள் பயிற்சிக்கு வந்தனர்.

விபத்து இல்லாமல் பட்டாசு தயாரிப்பதற்காக அரசு சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டும் அலட்சியப்படுத்தப்பட்ட நிலையில் பல்வேறு விதிமுறைகள் விதித்த பின்னரே பயிற்சிக்கு வந்தனர். 2025 தீபாவளிக்கு பட்டாசு தயாரிப்பதற்காக இன்னும் சில நாட்களில் இப்பகுதியில் உள்ள பட்டாசு ஆலைகள் இயங்க துவங்கும்.

எனவே இந்த ஆண்டாவது முறையாக பயிற்சி வகுப்பிற்கு வந்து விபத்து இல்லாமல் பட்டாசு தயாரிக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us