/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மோசடி வழக்கில் விடுவிக்க முன்னாள் அமைச்சர் மனு: ஜன. 5க்கு ஒத்திவைப்பு
/
மோசடி வழக்கில் விடுவிக்க முன்னாள் அமைச்சர் மனு: ஜன. 5க்கு ஒத்திவைப்பு
மோசடி வழக்கில் விடுவிக்க முன்னாள் அமைச்சர் மனு: ஜன. 5க்கு ஒத்திவைப்பு
மோசடி வழக்கில் விடுவிக்க முன்னாள் அமைச்சர் மனு: ஜன. 5க்கு ஒத்திவைப்பு
ADDED : டிச 20, 2025 05:35 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: பணமோசடி செய்ததாக தொடரப்பட்ட இரு வழக்குகளில் இருந்து விடுவிக்க கோரி அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த மனுவிற்கு போலீசார், நேற்று பதில் மனு தாக்கல் செய்தனர். வழக்கை ஜன.5க்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.
விருதுநகர் மாவட்டம் சாத்துாரை சேர்ந்த ரவீந்திரன். இவரது சகோதரி மகனுக்கு ஆவினில் வேலை வாங்கி தருவதாக கூறி அ.தி.மு.க. நிர்வாகி விஜயநல்லதம்பி ரூ. 30 லட்சம் வாங்கி ஏமாற்றியதாக 2021ல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் ரவீந்திரன் புகார் அளித்தார். இதில் விஜய் நல்லதம்பி, ராஜேந்திர பாலாஜி, முத்துப்பாண்டி, மாரியப்பன், பாண்டியராஜன், ரவி கணேசன், ராமகிருஷ்ணன், நாகேஷா மீது ஒரு வழக்கும், ராஜேந்திர பாலாஜி பணம் பெற்றுக் கொண்டு தன்னை ஏமாற்றியதாக விஜய நல்ல தம்பி அளித்த புகாரில் ராஜேந்திர பாலாஜி, பாபுராஜ், பலராம் உள்ளிட்ட 7 பேர் மீது மற்றொரு வழக்கும் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்தனர்.
இந்த வழக்கு தற்போது ஸ்ரீவில்லிபுத்துார் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நேற்று நீதிபதி ஜெயக்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. ராஜேந்திர பாலாஜி, நல்லதம்பி ஆஜராகவில்லை. மற்றவர்கள் ஆஜராகி, தங்களை வழக்கிலிருந்து விடுவிக்க கோரி மனு செய்தனர்.
இரு வழக்கில் இருந்தும் தன்னை விடு விக்ககோரி ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்திருந்த மனுவுக்கு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் பதில் மனு தாக்கல் செய்தனர். இதனையடுத்து வழக்கின் விசாரணையை 2026 ஜன. 5க்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.

