ADDED : ஜன 30, 2025 04:58 AM

அ நிறம் | அளவு
சாத்துார்: சாத்துார் மேட்டமலை பி.எஸ்.என்.எல்., கல்வியியல் கல்லுாரியில் 15 வது பட்டமளிப்பு விழா நடந்தது. கல்லுாரி தலைவர் ராஜு துணைத் தலைவர் பாப்பா ராஜு தலைமை வகித்தனர்.
கல்லுாரி செயலர் முத்துக்குமார், துணைச் செயலாளர் பிருந்தா முன்னிலை வகித்தனர். முதல்வர் ராஜேஸ்வரி வரவேற்றார். கலெக்டர் ஜெயசீலன் 120 மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார். ஏற்பாடுகளை கல்லுாரி நிர்வாகம், பேராசிரியர்கள் செய்தனர்.
