ADDED : அக் 08, 2024 04:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை பாலையம்பட்டியில் வணிகவரி ,பதிவுத்துறை சார்பாக புதிய உதவி ஆணையர் அலுவலகத்திற்கான வணிகவரி அலுவலக கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது. அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்துகொண்டு 218 லட்சம் மதிப்பீட்டிலான கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டினார்.
முன்னாள் நகராட்சி தலைவர் சிவபிரகாசம், துணை தலைவர் பழனிச்சாமி, நகர செயலாளர் மணி, ஒன்றிய செயலாளர்கள் பொன்ராஜ், பாலகணேசன் மற்றும் வணிக வரி துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

