sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

அறுவடை இயந்திரங்களின் வாடகை நிர்ணயம் உரிமையாளர் விபரம் செயலியில் பதிவேற்றம்  மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

/

அறுவடை இயந்திரங்களின் வாடகை நிர்ணயம் உரிமையாளர் விபரம் செயலியில் பதிவேற்றம்  மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

அறுவடை இயந்திரங்களின் வாடகை நிர்ணயம் உரிமையாளர் விபரம் செயலியில் பதிவேற்றம்  மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

அறுவடை இயந்திரங்களின் வாடகை நிர்ணயம் உரிமையாளர் விபரம் செயலியில் பதிவேற்றம்  மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு


ADDED : பிப் 18, 2025 04:36 AM

Google News

ADDED : பிப் 18, 2025 04:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: வேளாண் பணிகளுக்கு விவசாயிகள் அறுவடை செய்யும் இயந்திரங்களின் வாடகை நிர்ணயம், உரிமையாளர் விபரம் உழவன்செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

விவசாயிகள் தங்கள் நெற்பயிரை குறித்த காலத்திற்குள் அறுவடை செய்ய உதவும் வகையில் விவசாயிகள் அறுவடை இயந்திரங்களின் உரிமையாளர்களை நேரடியாகத் தொடர்பு கொள்ளும் வகையில் வேளாண் பொறியியல் துறை மூலம் தனியாருக்குச் சொந்தமான 4456 நெல் அறுவடை இயந்திரங்களின் உரிமையாளர் பெயர், அலைபேசி எண், இயந்திரத்தின் பதிவு எண் உள்ளிட்ட விபரங்கள் மாவட்டம் , வட்டாரம் வாரியாக உழவன் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகள் தங்கள் நெற்பயிரை குறித்த காலத்தில் அறுவடை செய்வதற்குப் போதுமான வேலையாட்கள் இல்லாத நிலையில் அறுவடைப் பணிகளை உரிய காலத்தில் செய்வதற்கும் மற்றும் குறைந்த செலவில் மேற்கொள்வதற்கும் ஒருங்கிணைந்த அறுவடை இயந்திரங்களின் பங்கு முக்கியம் வாய்ந்ததாக உள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் 2025 ம் ஆண்டுக்கு தனியார் நெல் அறுவடை இயந்திரங்களுக்கான வாடகை நிர்ணயம் செய்வது தொடர்பாக விவசாயிகள், தனியார் நெல் அறுவடை இயந்திர உரிமையாளர்களுடனான ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் அறுவடை செய்ய பெல்ட் வகை அறுவடை இயந்திரங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு வாடகையாக ரூ.2600என்றும்,டயர் வகை அறுவடை இயந்திரங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு வாடகையாக ரூ.1800 என்றும் வாடகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே நெல் அறுவடை இயந்திர உரிமையாளர்கள் நிர்ணயம் செய்யப்பட்ட வாடகைத் தொகைக்கு மிகாமல் பெற வேண்டும்.

மாவட்டத்திலுள்ள 24 டயர் வகை இயந்திரங்கள் விபரங்கள் வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள வட்டாரம் அல்லது அருகாமை மாவட்டத்திலுள்ள அறுவடை இயந்திரங்களின் உரிமையாளர்களை அலைபேசியில் நேரடியாகத் தொடர்பு கொண்டு அறுவடை இயந்திரங்களை வாடகை அடிப்படையில் பயன்படுத்தி அறுவடைப் பணிகளை செய்யலாம் என கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us