ADDED : பிப் 01, 2024 06:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு ஹெல்மெட் அணிந்து விழிப்புணர்வு ஊர்வலம் சென்றனர்.
டவுன் போலீஸ் ஸ்டேஷனிலிருந்து துவங்கிய ஊர்வலத்தினை டி.எஸ்.பி.முகேஷ் ஜெயக்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணன் தலைமையில் போக்குவரத்து காவல்துறை எஸ்.ஐ. ராமச்சந்திரன், தர்மராஜ் உட்பட ஏராளமான போலீசார் ஹெல்மெட் அணிந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக டூவீலரில் ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.