/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை
/
வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை
ADDED : நவ 21, 2025 04:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் அருகே என்.ஜி.ஓ., காலனியைச் சேர்ந்தவர் சுதர்சன். இவரின் அக்கா பவித்ராவிற்கு நவ.17ல் மதியம் 1:00 மணிக்கு விபத்து ஏற்பட்டதால் பார்ப்பதற்காக திருவனந்தபுரத்திற்கு குடும்பத்தினருடன் சென்றார்.
நேற்று முன்தினம் காலை 9:30 மணிக்கு வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 4 பவுன் தங்க வளையல்கள், ஒரு பவுன் தங்க நாணயம், ஒரு கிராம் தங்க நாணயம், தங்கத்தோடு ஆகியவை திருடு போனது தெரிந்தது. ஊரகப்போலீசார் விசாரிக்கின்றனர்.

