ADDED : செப் 22, 2024 03:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார் : சாத்துார் அயன்சத்திரப்பட்டியை சேர்ந்தவர் சோலையப்பன், 64. இவர் மகளை தாயில்பட்டி பச்சையாபுரத்தை சேர்ந்த முருகன்க்கு திருமணம் செய்துள்ளார். முருகனுக்கும், பக்கத்து வீட்டைச் சேர்ந்த நாகராஜ்க்கும் இடையில் முன் பகை இருந்துள்ளது.
செப். 12ல் இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டு மோதல் ஆனது. இரு தரப்பினரும் கைகளால் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் இரு தரப்பையும் சேர்ந்த 10 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.
மோதலில் சோலையப்பன், 64. படுகாயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று சிகிச்சை பலனின்றி பலியானார். வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.