/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஸ்ரீவி., ஆண்டாள் கோவிலில் கூடாரவல்லி உத்ஸவம்
/
ஸ்ரீவி., ஆண்டாள் கோவிலில் கூடாரவல்லி உத்ஸவம்
ADDED : ஜன 12, 2025 08:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவிலில் கூடாரவல்லி உத்ஸவம் நேற்று நடந்தது. 'கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா' என்ற பாசுரப்படி, மார்கழி 27ல் ராமானுஜர் சார்பில் பெருமாளுக்கு அக்கார அடிசில் சமர்ப்பித்து, ஆண்டாளின் பிரார்த்தனையை நிறைவேற்றும் வகையில் கூடாரவல்லி உத்ஸவம் நடைபெறுவது வழக்கம்.
இதன்படி, நேற்று அதிகாலை 4:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு, 100 வெள்ளி கிண்ணங்களில் அக்கார அடிசில் சமர்ப்பிக்கப்பட்டு, சிறப்பு வழிபாடு நடந்தது.
ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

