/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நிலம் தொடர்பான குறைதீர் கூட்டம்
/
நிலம் தொடர்பான குறைதீர் கூட்டம்
ADDED : நவ 23, 2024 06:17 AM
விருதுநகர்; கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு:
நிலம் சார்ந்த பொருள்கள் தொடர்பான மனுக்களுக்கு உரிய தீர்வு வழங்க ஒவ்வொரு மாதமும் கடைசி செவ்வாய் கிழமை காலை 11:00 மணி முதல் 12:30 மணி வரை (நிலம் எடுப்பு, நில ஆக்கிரமிப்பு, பட்டா மாறுதல், பட்டா மேல்முறையீடு, பட்டா ரத்து, இலவச வீட்டுமனைப்பட்டா, நிலச்சீர்திருத்தம் தொடர்பான மனுக்கள்) சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடந்து வருகிறது.
இந்த மாதத்திற்கான சிறப்பு குறைதீர் கூட்டம் நவ. 26ல் நடக்கிறது.
இதற்கான மனுக்கள் பதிவு காலை 10:00 மணி முதல் நடக்க உள்ளது. இக்கூட்டத்தில் அனைத்து வட்டங்களைச் சார்ந்த வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, போலீஸ் துறை, பத்திரப்பதிவுத்துறையைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொள்வர். விவரங்களுக்கு ஐ -பிரிவு, தொலைபேசி எண்: 04562 -252742ஐ தொடர்பு கொள்ளலாம், என்றார்.