sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

பட்டாசு கடை அருகில் தகர செட்டில் பட்டாசு தயாரிப்பு

/

பட்டாசு கடை அருகில் தகர செட்டில் பட்டாசு தயாரிப்பு

பட்டாசு கடை அருகில் தகர செட்டில் பட்டாசு தயாரிப்பு

பட்டாசு கடை அருகில் தகர செட்டில் பட்டாசு தயாரிப்பு


ADDED : செப் 19, 2024 04:24 AM

Google News

ADDED : செப் 19, 2024 04:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி: வீடுகளிலும், குடியிருப்புகளுக்கு மத்தியில் தகர செட் அமைத்தும், பட்டாசு கடை அருகிலும் சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்பது தொடர்ந்து நடந்து வருகிறது. இவர்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, சாத்துார், விருதுநகர், வெம்பக்கோட்டை பகுதியில் 1080 பட்டாசு ஆலைகள் உள்ளன.

இது தவிர 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசு கடைகளும் இயங்குகின்றன. சிவகாசியில் பல்வேறு பகுதிகளில் வீடுகளிலும், குடியிருப்பு பகுதிகளில் தகர செட் அமைத்தும் சட்ட விரோதமாகவும் சிலர் பட்டாசு தயாரிக்கின்றனர்.

தவிர பட்டாசு கடை அருகிலும் செட் அமைத்து சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்கப்படுகிறது. இங்கு எந்தவித பாதுகாப்பு விதிகளும் முறையாக பின்பற்றப்படுவது இல்லை.

இதுபோன்று சட்ட விரோதமாக பட்டாசு தயாரிக்க வரும் தொழிலாளர்களுக்கு ஊதியம் அதிகமாக கொடுக்கப்படுகின்றது.

இவ்வாறு சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்கும் போது விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.

ஆனால் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான நிவாரண உதவியும் கிடைக்க வாய்ப்பில்லை.

விருதுநகர் மாவட்டத்தில் இது போல் சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்து நடந்த விபத்துக்களில் பலர் உயிழந்துள்ளனர்.

குடியிருப்புப் பகுதிகளில் வெடி விபத்து ஏற்பட்டால் பெரிய அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது எனத் தெரிந்தும் இது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இது போன்று சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பவர்கள் மீதும் பட்டாசுகளை பதுக்குபவர்கள் மீதும் தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us