sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

மாரனேரி -- இ.டி.ரெட்டியபட்டி ரோடு சேதம்: மக்கள் அவதி

/

மாரனேரி -- இ.டி.ரெட்டியபட்டி ரோடு சேதம்: மக்கள் அவதி

மாரனேரி -- இ.டி.ரெட்டியபட்டி ரோடு சேதம்: மக்கள் அவதி

மாரனேரி -- இ.டி.ரெட்டியபட்டி ரோடு சேதம்: மக்கள் அவதி


ADDED : அக் 21, 2024 04:41 AM

Google News

ADDED : அக் 21, 2024 04:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி: சிவகாசி அருகே மாரனேரியில் இருந்து இ.டி.ரெட்டியபட்டி செல்லும் ரோடு சேதம் அடைந்திருப்பதால் 3 கிராம மக்கள் கூடுதலாக 10 கி.மீ., சுற்றி வெம்பக்கோட்டை, சாத்துார் செல்ல வேண்டியுள்ளது. எனவே சேதமடைந்த ரோட்டினை சீரமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மாரனேரியில் இருந்து இ.டி.ரெட்டியபட்டி 4 கி.மீ. துாரத்தில் உள்ளது. இந்த ரோடு போடப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில் தற்போது முற்றிலும் சிதைந்து போக்குவரத்திற்கு பயனற்று உள்ளது. வேறு வழியின்றி இந்த ரோட்டில் வருகின்ற வாகனங்கள் அடிக்கடி பழுதடைகின்றது. மாரனேரி, விளாம்பட்டி, சிங்கம்பட்டி பகுதி மக்கள் தாயில்பட்டி, சாத்துார் வெம்பக்கோட்டை செல்வதற்கு இ.டி ரெட்டியபட்டி வழியாக செல்வர்.

ஆனால் ரோடு சேதத்தால் இப்பகுதியினர் சிவகாசி வந்து மற்ற நகரங்களுக்கு செல்ல வேண்டி உள்ளது. இதனால் கூடுதலாக 10 கி.மீ. அலைகின்றனர். இதனால் நேரம் விரயமாவதுடன், பணமும் அதிகமாக செலவாகிறது. மேலும் இதே ரோட்டில் உள்ள பட்டாசு ஆலைகளுக்கு வருகின்ற வாகனங்களும் பெரிதும் சிரமப்படுகின்றது. மழைக்காலங்களில் ஆலைகளுக்கு விடுமுறை அளிக்கும் அளவிற்கு ரோடு மோசமாகி விடுகிறது. எனவே இந்த ரோட்டை உடனடியாக சீரமைக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us