ADDED : பிப் 11, 2025 04:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் தாலுகா நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. தாலுகா செயலாளர் தினேஷ் குமார் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பகத்சிங் பேசினார்.
கூட்டத்தில் வத்திராயிருப்பு புறவழிச் சாலை திட்டம், அரசு மருத்துவமனை தரம் உயர்த்துதல், வருஷநாடு மலை பாதை திட்டத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

