/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மகளிர் மீது அதிக நம்பிக்கை: சாத்தூர் ராமச்சந்திரன்
/
மகளிர் மீது அதிக நம்பிக்கை: சாத்தூர் ராமச்சந்திரன்
மகளிர் மீது அதிக நம்பிக்கை: சாத்தூர் ராமச்சந்திரன்
மகளிர் மீது அதிக நம்பிக்கை: சாத்தூர் ராமச்சந்திரன்
ADDED : செப் 19, 2025 01:54 AM
அருப்புக்கோட்டை: ''தமிழக அரசு மகளிர் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளது'', என கடன் வழங்கும் விழாவில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசினார்.
அருப்புக்கோட்டையில் நடந்த மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கும் விழாவிற்கு கலெக்டர் சுகபுத்ரா தலைமை வகித்தார்.விழாவில் சுயஉதவி குழுக்களுக்கு கடன் வழங்கி அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசியதாவது : மகளிர் குழுக்கள் மீது அரசு அதிக நம்பிக்கை வைத்துள்ளதால், மகளிருக்கு கூடுதலாக கடன் வழங்கப்படுகிறது. நீங்கள் கடன் பெற்று குழுக்களுடன் ஒற்றுமையாக தொழில் செய்து தங்கள் வாழ்க்கையும் சமுதாயத்தை முன்னேற்ற வேண்டும். மகளிர்களுக்கு முதல்வர் எண்ணற்ற உதவிகளை செய்து கொண்டு வருகிறார். கடன்களை முறையாக செலுத்தி வரும் மகளிர் குழுக்களுக்கு கூடுதலாக கடன் வழங்கப்படுகிறது. பெண்கள் பொருளாதாரத்தில் யாரையும் எதிர்பாராமல் பார்க்காமல் தன்னுடைய சொந்த காலில் நிற்க வேண்டும். குழுக்களுக்கு எந்தவித அடமானம் இல்லாமல் 50 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. என்றும் பேசினார். நிகழ்ச்சியில் திட்ட இயக்குனர் ஜார்ஜ் ஆன்டனி மைக்கேல், அருப்புக்கோட்டை நகராட்சி தலைவி சுந்தரலட்சுமி, உதவி திட்ட அலுவலர் வசுமதி கலந்து கொண்டனர்.