sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

இரு மகள்களுடன் தாய் ரயில் முன் விழுந்து தற்கொலை

/

இரு மகள்களுடன் தாய் ரயில் முன் விழுந்து தற்கொலை

இரு மகள்களுடன் தாய் ரயில் முன் விழுந்து தற்கொலை

இரு மகள்களுடன் தாய் ரயில் முன் விழுந்து தற்கொலை


ADDED : ஆக 20, 2025 11:17 PM

Google News

ADDED : ஆக 20, 2025 11:17 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்:விருதுநகர் அருகே பட்டம்புதுாரில் தாய் ராஜவள்ளி 60, சிறுநீரக நோயால் அவதிப்பட்டு வந்ததாலும், வறுமை காரணமாகவும் வாய் பேச முடியாத தனது மகள்களான மாரியம்மாள் 30, முத்துப்பேச்சி 25, ஆகியோருடன் சேர்ந்து ரயில் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.

விருதுநகர் பட்டம்புதுார் காலனியை சேர்ந்தவர் ராஜவள்ளி. இவருக்கு சிறுநீரக குறைபாடு இருந்தது. கணவர் தர்மர்.இவர்களுக்கு மாரியம்மாள் , முத்துமாரி 27, முத்துப்பேச்சி என மூன்று மகள்கள். ராஜவள்ளி தவிர மற்ற நால்வரும் கூலித் தொழில் செய்து வந்தனர். இதில் மாரியம்மாள், முத்துப்பேச்சி இருவரும் வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளிகள். ராஜவள்ளி சிறுநீரக நோய் பாதிப்பால் அவதிப்பட்டார். நேற்று மாலை 5:30 மணிக்கு பட்டம்புதுாரில் திருவனந்தபுரத்தில் இருந்து திருச்சி சென்ற ரயில் முன்பு விழுந்து தாய் ராஜவள்ளி, மகள்கள் மாரியம்மாள், முத்துபேச்சி என மூவரும் தற்கொலை செய்து கொண்டனர்.

கணவர் தர்மர், இளைய மகளான முத்துமாரி கூலி வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்புவதற்குள் இந்த சம்பவம் நடந்தது. தர்மர் உடல்களை அடையாளம் கண்டார். தாய் சிறுநீரகம் பாதிக்கப்பட்ட நிலையில் வறுமை காரணமாக மகள்களுக்கு திருமணம் செய்து கொடுக்க முடியாமல் திணறி வந்ததால் இந்த முடிவுக்கு அவர்கள் வந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. துாத்துக்குடி ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us