sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

காற்றில் பறக்குது குப்பை அவதியில் வாகன ஓட்டிகள்

/

காற்றில் பறக்குது குப்பை அவதியில் வாகன ஓட்டிகள்

காற்றில் பறக்குது குப்பை அவதியில் வாகன ஓட்டிகள்

காற்றில் பறக்குது குப்பை அவதியில் வாகன ஓட்டிகள்


ADDED : ஜூலை 24, 2025 11:33 PM

Google News

ADDED : ஜூலை 24, 2025 11:33 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்,: விருதுநகரில் ரோட்டோரங்களில் காற்றில் பறக்கும் குப்பையால் வாகன ஓட்டிகள் அல்லல்படுகின்றனர்.

விருதுநகர் நகராட்சியின் ரோட்டோரங்களில் ஆங்காங்கே குப்பை பாயின்டுகள் முளைத்து வருகின்றன. இதில் சில நாள்பட்டவையாக உள்ளன. அதாவது நீண்ட காலமாக குப்பை பாயின்டாக இருந்தாலும், நகராட்சி நிர்வாகம் சார்பில் அவை அகற்றப்பட்டு குப்பை கொட்டாதீர் என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டாலும், மக்கள் கொட்டுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். அந்த வகையில் கொட்டப்பட்ட குப்பை தற்போது அடிக்கும் ஆடி காற்றில் பறந்து எதிர்திசைக்கு செல்வதால் வாகன ஓட்டிகள் அல்லல்படுகின்றனர்.

காற்றில் குப்பை, மண் அடித்து வாகன ஓட்டிகள் மீது படுகிறது. கணேஷ் நகர் அருகே உள்ள நான்கு வழிச்சாலை சர்வீஸ் ரோடு, சிவகாசி ரோடு சர்வீஸ் ரோடு பகுதிகளில் இந்த பிரச்னை உள்ளது. முன்பு குப்பை, பாயின்டாக இருந்தாலும், அவை அகற்றப்பட்ட நிலையில், பராமரிப்பற்ற காலநிலங்களில் ஆங்காங்கே தேங்கிய பிளாஸ்டிக் குப்பை இவ்வாறு காற்றில் அடித்து வரப்படுகின்றன.

நகராட்சி நிர்வாகத்தினர் சர்வீஸ் ரோட்டின் நடைபாதையில் குவிந்து கிடக்கும் குப்பையை அள்ள வேண்டும். இன்னொரு முறை குப்பை கொட்டாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us