ADDED : பிப் 04, 2026 05:49 AM
விருதுநகர்: விருதுநகர் நகராட்சி பாத்திமா நகர் மெயின் ரோட்டில் பாதாளச்சாக்கடை மேன்ஹோல்களில் அடைப்புகள் ஏற்பட்டுள்ளது. இவற்றை அகற்ற வேண்டும் என அப்பகுதியினர் நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இரு வாரங்களாக குடிநீருடன் கழிவு நீர் கலந்து வீடுகளுக்கு வருகிறது. மேலும் தாழ்வான வீடுகளில் கழிவு நீர் புகுந்து விடுகிறது. குப்பையை வாங்கும் பணிகள் சரியாக நடக்கவில்லை என மார்க்சிஸ்ட் கம்யூ., தலைமையில் மக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பொறியாளர் பிரபாகரன் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததால் கலைந்து சென்றனர்.
இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகன், நகர செயலாளர் ஜெயபாரத், நகராட்சி கவுன்சிலர் ஜெயகுமார், நகர்குழு உறுப்பினர்கள் ராஜா, கிளை செயலாளர்கள் ஸ்டாலின், முருகேஸ்வரி உள்பட பலர் பங்கேற்றனர்.

