sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

முருக பக்தர்கள் மாநாட்டிற்கு வாகனங்களில் செல்ல கெடுபிடி

/

முருக பக்தர்கள் மாநாட்டிற்கு வாகனங்களில் செல்ல கெடுபிடி

முருக பக்தர்கள் மாநாட்டிற்கு வாகனங்களில் செல்ல கெடுபிடி

முருக பக்தர்கள் மாநாட்டிற்கு வாகனங்களில் செல்ல கெடுபிடி


ADDED : ஜூன் 23, 2025 05:58 AM

Google News

ADDED : ஜூன் 23, 2025 05:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அருப்புக்கோட்டை : மதுரையில் நடக்கும் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு அருப்புக்கோட்டையில் இருந்து வாகனங்களில் செல்வதற்கு போலீசார் கெடுபிடி காட்டியதால் பக்தர்கள் அதிருப்தி அடைந்தனர்.

மதுரையில் நேற்று முருக பக்தர்கள் மாநாடு நடந்தது. இதற்கு தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து மக்கள் வாகனங்களில் லட்சக்கணக்கில் குவிந்தனர். நேற்று காலை அருப்புக்கோட்டையில் இருந்து இந்து முன்னணி சார்பாக 48 வாகனங்களில் பக்தர்கள் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால், போலீசார் துவக்கத்திலிருந்து பல கெடுபிடிகள் காட்டினர்.

மாநாடு செல்ல இருக்கும் வாகனங்கள், ஆர்.சி ., புக், டிரைவிங் லைசன்ஸ், அலைபேசி எண், வாகனங்களில் செல்பவர்கள் பற்றிய விபரங்கள் கேட்டதால் பக்தர்கள் வாகனங்களில் செல்ல தயக்கம் காட்டினர். மாநாட்டிற்கு குறைந்த அளவில் வாகனங்களில் செல்ல வேண்டும் என்பது போலீசாரின் குறிக்கோளாக செயல்பட்டனர். பல்வேறு கெடுபிடிகளை காட்டி வாகனங்களில் பக்தர்கள் செல்ல முடியாமல் செய்ததால் மாநாட்டிற்கு செல்லும் பக்தர்கள் அதிருப்தி அடைந்தனர்.






      Dinamalar
      Follow us