ADDED : நவ 04, 2024 05:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி : சிவகாசி பைபாஸ் ரோடு விலக்கிலிருந்து நாரணாபுரம் செல்லும் ரோடு 5 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. இப்பகுதியில் ஏராளமான பட்டாசு ஆலைகள், அச்சகங்கள், கடைகள் உள்ளன. தவிர கன்னி சேரி, ஆர்.ஆர். நகர், சூலக்கரை, விருதுநகர் கலெக்டர் அலுவலகம் செல்வதற்கு பெரும்பான்மையானோர் இந்த ரோட்டில் தான் சென்று வருகின்றனர். பள்ளி கல்லுாரி பஸ்களும் இந்த ரோட்டில் தான் வந்து செல்கின்றன.
இந்நிலையில் இந்த ரோடு ஆங்காங்கே சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதில் டூவீலர் உட்பட எந்த வாகனமும் எளிதில் சென்று வர முடியவில்லை. மழைக்காலங்களில் ரோட்டில் பள்ளம் இருப்பது தெரியாததால் டூவீலரில் செல்பவர்கள் அடிக்கடி கீழே விழுகின்றனர். கனரக வாகனங்கள் தட்டித் தடுமாறியே செல்கின்றன.