sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ஆண்டாள் கோயிலில் எண்ணெய் காப்பு உற்ஸவம் துவக்கம்

/

ஆண்டாள் கோயிலில் எண்ணெய் காப்பு உற்ஸவம் துவக்கம்

ஆண்டாள் கோயிலில் எண்ணெய் காப்பு உற்ஸவம் துவக்கம்

ஆண்டாள் கோயிலில் எண்ணெய் காப்பு உற்ஸவம் துவக்கம்


ADDED : ஜன 09, 2024 12:42 AM

Google News

ADDED : ஜன 09, 2024 12:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் மார்கழி எண்ணெய் காப்பு உற்ஸவம் நேற்று முதல் துவங்கியது.

இதனை முன்னிட்டு நேற்று காலை 10:30 மணிக்கு ஆண்டாள் தந்த பல்லக்கில் கோயிலில் இருந்து புறப்பட்டு மாட வீதிகள் வழியாக ராஜகோபுரம் முன் எழுந்தருளினார். அங்கு போர்வை படி களைந்து திருவடி விளக்கம், அரையர் சேவை, தீர்த்தம், சடாரி நடந்தது. பின்னர் அங்கிருந்து ஆண்டாள் புறப்பட்டு மண்டபங்கள் எழுந்தருளி ரத வீதிகள் வழியாக திருமுக்குளம் எண்ணெய் காப்பு மண்டபத்திற்கு வந்தடைந்தார்.

அங்கு மதியம் 3:00 மணிக்குமேல் எண்ணெய் காப்பு சேவை, பத்தி உலாவுதல், சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. பின்னர் இரவு 7:30 மணிக்குமேல் ஆண்டாள் அங்கிருந்து புறப்பட்டு ரத வீதிகள் வழியாக கோயிலுக்கு வந்தடைந்தார். திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

விழாவில் தினமும் ஆண்டாள் வெவ்வேறு அலங்காரத்தில் கோயிலில் இருந்து புறப்பட்டு எண்ணெய்காப்பு உற்ஸவத்தில் பங்கேற்கிறார். ஜன.15ல் மணவாள மாமுனிகள் மங்களாசாசனமும், ஜன. 16ல் முத்துக்குறி, கணுப்பாரி வேட்டையும் நடக்கிறது. ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் வெங்கட் ராமராஜா தலைமையில் செயல் அலுவலர் முத்துராஜா, கோயில் பட்டர்கள் செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us